Tuesday, June 29, 2010

"கலையும் இலக்கியமும் "

"கலையும் இலக்கியமும் "
மக்களை மேம்படுத்தாத கலை என்பது போர்களமில்லாத போர்வீரர்கள் போன்றதுதான்.படைப்பாளிகள்,எழுதாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் வேலை பொதுமக்கள் பேசும் மொழியை கற்றுகொள்வது தான்.பொதுமக்கள் என்பவர்கள் யார்? நமது மக்கள் தொகையில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேலுள்ள தொழிலாளர்கள்,விவசாயிகள் ஆவர்.உலகத்திலேயே பரிசுத்தமான மக்கள் தொழிலாளிகளும்,விவசாயிகளும்தான். அவர்கள் கையில் புழுதி படிந்து இருந்தாலும்,அவர்கள் கால்களில் சாணம் ஒட்டிக்கொண்டு இருந்தாலும் அவர்கள் தான் "பூர்ஷ்வா-குட்டி பூர்ச்வாக்களை விட சுத்தமானவர்கள்.நமது இலக்கியமும் ,கலையும் இவ்வர்கதிர்க்கு முதலில் சேவை செய்ய வேண்டும். ......................................................நமது தோழர்களில் பலருக்கும் குட்டி பூர்ஷ்வா மனோபாவமிருக்கிறது அவர்களில் பலர் ,படிப்பாளி வர்கத்தை சேர்ந்தவர்களாவர்.ஆகவே தான் அவர்கள் தங்களை போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும்,அதன் விளைவாக இந்த படிப்பாளி வர்கத்தை பற்றி ஆராயவும்,வர்ணிக்கவும் தலைபட்டுவிடுவதில் அவர்களுக்கு ஒரு பிரியம் ஏற்பட்டுவிடுகிறது. இதே காரியத்தை அவர்கள் பாட்டாளி வர்க்க மனோபாவத்தில் அவர்கள் செய்வார்களேயானால் அது மிகவும் பயனுடையதாக இருக்கும்.அனால் செய்வது இல்லை. குட்டி பூர்சுவா மனோபாவத்தில் இந்த தோழர்கள் ஆராய்வதும்,வர்நிபதுமாக குட்டி பூர்சுவா வர்கத்தை பிரதிபலிக்கும் நூல்களை போற்றுகிறார்கள்.குட்டி பூர்சுவா மனோபாவம் கொண்ட படிபாளிகளிடம் பரம அனுதாபம் காட்டுவதும், சிலசமயம் குட்டி பூர்சுவா குறைபாடுகளை அனுதாபத்தோடு பார்த்து,அதற்காக பரிந்து பேசுவதையும் நாம் பார்த்து இருக்கிறோம்.
இத்தகைய தோழர்களுக்கு,தொழிலாளர்கள்,விவசாயிகள்,சிப்பாய்களிடம்(மக்கள் போராளிகள்-அழுத்தம் நம்முடையது) உண்மையான தொடர்பு கிடையாது.அவர்களை பற்றிய ஆராய்ச்சியோ,விஷய ஞானமோ இல்லாதததாலும்,அவர்களிடையே நெருங்கிய நண்பர்கள் அதிகமில்லாததாலும் இந்த பகுதிகளை போதிய அளவு வர்ணிக்க அவர்களால் முடியவில்லை.....................................
இவர்கள் மக்கள் கலைகள் சுவரொட்டி சித்திரங்கள்,செய்திகள்,நாடோடி பாடல்கள்,பாமர கதைகள்,அவர்கள் வீட்டு மொழி போன்றவையை அருவெருக்கிறார்கள். அதே சமயம் பூர்சுவாக்களின் வாய் வீசுகளை ஏற்றுகொள்கிறார்கள். இத்தகைய தோழர்கள் குட்டி பூர்சுவா பக்கம் உள்ள வெளியின் மீது மிக வசதியாக அமர்ந்துகொண்டுள்ளார்கள்.இன்னும் நாசூக்காக சொல்லவேண்டுமென்றால் இவர்களது மேதாவிலாச ஆத்மாக்கள்,குட்டி பூர்சுவ மாளிகையில் விலாவி நடமாடுகின்றன.
..............................ஆக நம் எழுத்தாளர்களும்,கலைஞர்களும், படைப்பாளிகளும், தங்களது அடிப்படைகளை மாற்றிக்கொண்டு,தொழிலாளர்கள்,விவசாயிகள்,சிப்பாய்கள் பக்கமாக,படிப்படியாக நகர்ந்து செல்லவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் வூடுருவி புகுந்துகொள்ள வேண்டும். அவர்களது போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுதுகொள்ளவேண்டும்.
......ஒரு உண்மையான இலக்கியத்தையும்,கலையையும் தொழிலாளர்கள்,விவசாயிகள்,சிப்பாய்கள் (மக்கள் போராளிகள் ) என இவ்வர்கதிர்க்காக படைப்பதே படைப்பாளியின் கடைமையாக இருக்க வேண்டும்.

கலை இலக்கியத்தை பற்றி யேனானில் 1942 may 2 to 23 வரையிலான சீன விடுதலை போராட்ட மாநாட்டில் பொதுவுடைமை தந்தை மாசேதுங் பேசியது.

No comments:

Post a Comment