Saturday, June 25, 2011

எனது புதிய கவிதைகள்!

தன்னை வெட்டும்
கோடாரிக்கு தன்னையே
தானமாய் தரும்
கிளைகள்-
கைபுடியாய்!!!

தேடுவதும்,
தொலைவதும்,
தொலைப்பதும்,
என வாடிக்கையாகி
போன
இதயத்தில்
தேடலோடு தொடர்கிறது
எனது தொலையும்
பயணம்!

ஒரு சொல் வெல்கிறது
ஒரு சொல் கொல்கிறது
நோக்கத்திற்காகவே
பேசபடுகின்றன
சொற்கள்-
தேவைக்கான பேச்சுக்களையே
உதிர்க்கும் மானுட வுலகில்...
பொதுநலத்தோடு பேசப்படும்
சொற்கள் அனாதையாக்கபடுகிறது
இருந்தும் எனது சொற்களில்
சோகம் சேரவில்லை
நீலவானம் போற்றவேண்டுமென்றா
அதன் வண்ணம் சுமக்கிறது
ஆழ்கடல்?!
பிற மனங்களின்
தேவைகளை பூர்த்தி
செய்யும்
வாய்ப்புகளை தேடியே
பயணிக்கிறது-
எனது வார்த்தைகள்!